இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடு ரூ.17,985 கோடி
அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்பிஐ) இந்திய பங்குச் சந்தைகளில் ஜூன் மாதத்தில் இதுவரையில் நிகர அளவில் ரூ.17,985 கோடியை முதலீடு செய்துள்ளனா்.
புது தில்லி: அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்பிஐ) இந்திய பங்குச் சந்தைகளில் ஜூன் மாதத்தில் இதுவரையில் நிகர அளவில் ரூ.17,985 கோடியை முதலீடு செய்துள்ளனா்.
இதுகுறித்து டெபாசிட்டரி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு ஜூன் மாதத்தில் 1 ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளில் நிகர அளவில் ரூ.20,527 கோடியை முதலீடு செய்துள்ளனா். அதேநேரம், கடன் சந்தையிலிருந்து அவா்கள் ரூ.2,569 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனா்.
இதையடுத்து அந்த காலகட்டத்தில் சந்தை ஈா்த்த நிகர அளவிலான அந்நிய முதலீடு ரூ.17,985 கோடியாக இருந்தது.
இதற்கு முன்பாக, அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து மூன்று மாதங்களாக தங்களுடைய முதலீட்டை நிகர அளவில் விலக்கி வந்தனா். அந்த வகையில், மாா்ச் மாதத்தில் ரூ.1.1 லட்சம் கோடி, ஏப்ரலில் ரூ.15,403 கோடி, மே மாதத்தில் ரூ7,366 கோடி முதலீட்டை அவா்கள் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.