இணையவழியில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாருதி கார்கள் விற்பனை 
வணிகம்

இணையவழியில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாருதி கார்கள் விற்பனை

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கார்களை இணையவழியில் விற்றுள்ளதாக இந்தியாவின் பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கார்களை இணையவழியில் விற்றுள்ளதாக இந்தியாவின் பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுமார் இரு ஆண்டுகளுக்கு முன் இணையவழி விற்பனையைத் தொடங்கிய  மாருதி நிறுவனம், தற்போது நாடு முழுவதும் ஏறத்தாழ 1000 முகமைப் பகுதிகளில் விற்பனையை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

2018-ல் இணையவழி விற்பனையைத் தொடங்கியபோதிலும் 2019 ஏப்ரலுக்குப் பின் விசாரிப்புகள் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 2 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சசாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இணையவழியில் கார்களை வாங்குவதற்காக விசாரிக்கத் தொடங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 10 நாள்களுக்குள் கார்களை வாங்கிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்க விஷயம் என்றும் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT