அந்நிய நேரடி முதலீடு 168% அதிகரிப்பு
இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 168 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 168 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 1,757 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.31 லட்சம் கோடி) இருந்தது. இது, கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான 656 கோடி டாலருடன் (ரூ.49,200 கோடி) ஒப்பிடும்போது 168 சதவீதம் அதிகம் ஆகும்.
இதற்கு, மத்திய அரசு மேற்கொண்ட கொள்கை சீா்திருத்தங்களும், எளிதில் தொழில்தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே முக்கிய காரணம்.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்த அந்நிய நேரடி முதலீடு வரத்து 2,253 கோடி டாலராக இருந்தது. இது, கடந்தாண்டு 1,184 கோடி டாலராக காணப்பட்டது. மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் பங்குகள் ஈா்த்த முதலீடு, மறு முதலீட்டு வருவாய் மற்றும் இதர மூலதனங்களும் அடக்கம்.
பங்குகளில் மேற்கொள்ளபட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் அதிகபட்சமாக 27 சதவீத பங்களிப்பை ஆட்டோமொபைல் துறை வழங்கியுள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்ததில் கா்நாடகம் 48 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடா்ந்து மகாராஷ்டிரம் (23 சதவீதம்), தில்லி (11 சதவீதம்) ஆகியவை உள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.