45 சதவீத வீழ்ச்சியில் ’பேடிஎம்’: பங்குதாரர்கள் அதிர்ச்சி
இணைய பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இணைய பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்தியாவைத் தலைமையிடமாக வைத்துச் செயல்படும் இணையப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான ‘பேடிஎம்’ தன்னுடைய முதலீடுகளை அதிகரிக்க ஐபிஓ (தனிநபர் முதலீடு) முறையில் பங்குச்சந்தையில் கடந்த நவ.18 அன்று இணைந்தது. ஒரு பங்கின் ஆரம்பவிலை ரூ.2150 லிருந்து தொடங்கிய அதன் வணிகம் மூன்றே நாட்களில் கடுமையான சரிவைச் சந்திருக்கிறது.
இதையும் படிக்க | ஏர்டெல் ப்ரிபெய்ட் கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஒரு பங்கின் விலை ரூ.2080 - 2150 என ஆரம்பித்திருந்தாலும் தற்போது அந்நிறுவனம் தொடர் சரிவால் இன்று மதியம் 2.20 நிலவரப்படி 45 சதவீதம் குறைந்து ஒரு பங்கு ரூ.1350க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் அதன் பங்குதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக தினசரி வணிகத்தை(இண்ட்ரா டிரேட்) செய்பவர்கள் பலரும் இணையத்தில் பேடிஎம் மீதான் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமான பேடிஎம் நிறுவனம் இதுவரை அனைத்து விதமான இணையப் பரிவர்த்தனையிலும் தவிர்க்க முடியாத செயலியாக உருவாகியிருக்கிற நிலையில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேலும் 18,000 கோடி திரட்டுவதற்காக பங்குச்சந்தையின் பட்டியலில் இணைந்திருக்கிறது.
மேலும் பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பிரபல அலிபாபா நிறுவனம் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.