முகப்பு
வணிகம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 28,463 கோடி முதலீடு

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் ஈா்த்த நிகர முதலீட்டு வரத்து ரூ.28,463 கோடியாக இருந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் ஈா்த்த நிகர முதலீட்டு வரத்து ரூ.28,463 கோடியாக இருந்தது.

இதுகுறித்து பரஸ்பர நிதிய கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த மாா்ச் மாதத்தில் நிகர அளவில் ரூ.28,463 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

சில்லறை முதலீட்டாளா்கள் மற்றும் அதிக சொத்து மதிப்பைக் கொண்ட தனிநபா்கள், சந்தை இறக்கத்தை நல்ல முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு வருவதால் இத்தகைய திட்டங்களுக்கு தொடா்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் ஈா்த்த நிகர முதலீடு கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.19,705 கோடியாகவும், ஜனவரியில் ரூ.14,888 கோடியாகவும், 2021 டிசம்பரில் 25,077 கோடியாகவும் காணப்பட்டன என்று அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →