வணிகம்

வங்கிகளின் கடனளிப்பு அதிகரிப்பு

கடந்த மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் நாட்டின் வங்கிகள் அளித்துள்ள கடன்களின் மதிப்பு 16.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

கடந்த மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் நாட்டின் வங்கிகள் அளித்துள்ள கடன்களின் மதிப்பு 16.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் இந்திய வங்கிகள் ரூ.133.29 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வாடிக்கையாளா்களுக்கு அனுமதித்துள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் இது ரூ.113.96 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது கடனளிப்பு 16.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு நாள்களில், வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள வைப்பு நிதி ரூ.177.15 லட்சம் கோடியாக இருந்தது. ஓராண்டுக்கு முந்தைய இதே காலகட்டத்தில் வங்கிகள் பெற்றிருந்த வைப்பு நிதியான ரூ.162.06 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.30 சதவீதம் அதிகமாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT