வணிகம்

பங்குச் சந்தை தொடக்கம்: 980 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சென்செக்ஸ் 980 புள்ளிகளை இழந்து வர்த்தகமாகி வருகிறது.

DIN

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சென்செக்ஸ் 980 புள்ளிகளை இழந்து வர்த்தகமாகி வருகிறது.

நேற்று (பிப்.9) 58,926.03  புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,447.15 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  980.2 (காலை 10.20 மணி நிலவரப்படி) புள்ளிகளை இழந்து  57,971.2 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 17,605.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,451.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 282 புள்ளிகள் இழந்து 17,325.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் மிதமான வளர்ச்சியை அடைந்த சென்செக்ஸ் நேற்று வரை  எழுச்சியுடன் இருந்த நிலையில் தற்போது கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ், ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை இறக்கத்தை சந்தித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT