சரிவைச் சந்திக்கும் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 104 புள்ளிகள் இழப்பு
இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் நாலாவது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் குறைந்ததால் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் நாலாவது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் குறைந்ததால் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
நேற்று (பிப்.16) 57,996.68 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,217.69 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 104.67 புள்ளிகளை இழந்து 57,892.01 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 17,322.20 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,396.55 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 17.60 புள்ளிகள் இழந்து 17,304.60 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
சென்செக்ஸில் எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஏற்றத்தையும் ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆகியவை இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.
நிஃப்டி வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி லைப், ரிலையன்ஸ் டாடா கான்ஸ் ஏற்றத்தையும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி இறக்கத்தையும் அடைந்தது.
இதையும் படிக்க| என்.எல்.சி. இந்தியா: நிகர லாபம் ரூ.797 கோடி