வணிகம்

தொடர் வீழ்ச்சியில் பேடிஎம்: பங்குதாரர்கள் அதிர்ச்சி

இந்தியப் பங்குச் சந்தையில் பேடிஎம் நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

DIN

இந்தியப் பங்குச் சந்தையில் பேடிஎம் நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தை ரஷியா-உக்ரைன் போருக்குப் பின் கடுமையான சரிவிலும் ஏற்றத்திலும் சென்றுகொண்டிருக்கிற நிலையில் இணையப் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் பங்குகளின் விலை கடந்த சில நாள்களாக கடுமையான வீழ்ச்சியை அடைந்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மாதம் ஒரு பேடிஎம் பங்கின் விலை ரூ.850 என வர்த்தகமானது. ஆனால், இன்று ரூ.618 வரை வீழ்ச்சியடைந்துள்ளதால் பங்குதாரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, கடந்த மார்ச் 11 ஆம் தேதி பணப் பரிவர்த்தனை விதிகளை முறையாகப் பின்பற்றாத விவகாரத்தில்  பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் காரணமாகவும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT