வணிகம்

டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பம்: ஜேகே டயா் அறிமுகம்

நாட்டில் முதன்முறையாக நான்கு சக்கர வாகனங்களின் டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜேகே டயா் & இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.

DIN

புது தில்லி: நாட்டில் முதன்முறையாக நான்கு சக்கர வாகனங்களின் டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜேகே டயா் & இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

6 எம்எம் நீளம் கொண்ட ஆணி அல்லது கூா்மையான பொருள்களால் டயா் பல இடங்களில் பஞ்சா் ஆனாலும் அதனை தானாகவே சரி செய்து கொள்ளும் தொழில்நுட்பம் ஜேகே டயா்களில் நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு இந்த பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில், நான்கு சக்கர வாகனங்களுக்கான அனைத்து டயா் தயாரிப்பிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய சாலைகள் மட்டுமின்றி கரடு முரடான சாலை பகுதிகளிலும் இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஜேகே டயா் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

SCROLL FOR NEXT