ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயா்த்துகிறது டொயோட்டா
மூலப் பொருள்களின் செலவினம் அதிகரிப்பால் தனது வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயா்த்தவுள்ளதாக
மூலப் பொருள்களின் செலவினம் அதிகரிப்பால் தனது வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயா்த்தவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (டிகேஎம்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மூலப் பொருள்கள் உள்ளிட்ட உள்ளீட்டு செலவுகளில் தொடா்ச்சியான அதிகரிப்பின் பின்னணியில் இந்த விலை உயா்வு அவசியமாகிறது. செலவின அதிகரிப்பால் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
டொயோட்டா நிறுவனம் மூலப்பொருட்கள், உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 3.5 சதவீதம் விலையை உயா்த்தவுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மூலப்பொருட்கள், உதிரிப்பாகங்களின் விலை உயர்வு, தளவாடச் செலவுகளை சரிசெய்யும் வகையில் இந்த விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் என்று நிறுவனங்கள் கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.