இன்ஸ்டாகிராம் கணக்கு முடங்கிவிட்டதா! புகார்களுக்கு மெட்டா-வின் பதில்
இன்ஸ்டாகிராம் செயலியில் கணக்குகள் நீக்கப்பட்டுவிட்டதாக நோடிபிகேஷன் வருவதாக பயனர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டதாக பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இன்ஸ்டாகிராமை இயக்க முடியவில்லை எனும் பயனர்களின் புகார்களுக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் பதிலளித்துள்ளது.
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கடந்த நில நாள்களுக்கு முன்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் சேவை முடங்கிய நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் செயலியில் கணக்குகள் நீக்கப்பட்டுவிட்டதாக நோடிபிகேஷன் வருவதாக பயனர்கள் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பயனர்களின் புகார்களுக்கு இன்ஸ்டாகிராம் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பதிவில், இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். பிரச்னைக்கான காரணத்தை கண்டறியும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.