சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தன
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன. சென்செக்ஸ் 300 புலிகளுக்கும் மேல் குறைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
நேற்று (செவ்வாய்கிழமை) 65,846.50 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) காலை 65,810.96 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.25 மணி நிலவரப்படி, 335.80 புள்ளிகள் குறைந்து 65,510.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 83 புள்ளிகள் குறைந்து 19,487.85 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
எம் & எம், பாரதி ஏர்டெல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் இன்று உயர்ந்து வருகின்றன.
சன் பார்மா, விப்ரோ, கோட்டாக் பேங்க், எல் & டி, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.