ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள் 
வணிகம்

ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்

தொடர்ச்சியாக எட்டு நாள்களுக்குப் பின் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை ஏறுமுகத்தில் வணிகமாகின.

ENS


புது தில்லி: தொடர்ச்சியாக எட்டு நாள்களுக்குப் பின் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை ஏறுமுகத்தில் வணிகமாகின.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து வணிகமானது.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வணிகத்துக்கு இடையே, அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளும் இன்று காலை உயர்வுடன் வணிகமான நிலையில், இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,808.25 என்ற அளவில் வணிகமானது. இதன் சந்தை மதிப்பானது ரூ.2.06 லட்சம் கோடி.

அத்வானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 8.96 சதவிகிதம் உயர்ந்து ரூ.595க்கு வணிகமானது. இதனால் சந்தை மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடியானது.

அதானி வில்மர் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.399.40 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,324 ஆகவும் ஆதானி க்ரீன் எனர்ஜி 2.10 சதவிகிதம் உயர்ந்து ரூ.906.15 ஆகவும் வணிகமாகின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT