ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள் 
வணிகம்

ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்

தொடர்ச்சியாக எட்டு நாள்களுக்குப் பின் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை ஏறுமுகத்தில் வணிகமாகின.

ENS


புது தில்லி: தொடர்ச்சியாக எட்டு நாள்களுக்குப் பின் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை ஏறுமுகத்தில் வணிகமாகின.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து வணிகமானது.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வணிகத்துக்கு இடையே, அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளும் இன்று காலை உயர்வுடன் வணிகமான நிலையில், இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,808.25 என்ற அளவில் வணிகமானது. இதன் சந்தை மதிப்பானது ரூ.2.06 லட்சம் கோடி.

அத்வானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 8.96 சதவிகிதம் உயர்ந்து ரூ.595க்கு வணிகமானது. இதனால் சந்தை மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடியானது.

அதானி வில்மர் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.399.40 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,324 ஆகவும் ஆதானி க்ரீன் எனர்ஜி 2.10 சதவிகிதம் உயர்ந்து ரூ.906.15 ஆகவும் வணிகமாகின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT