வணிகம்

நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம்: உயா்த்தியது சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தங்களிடம் மேற்கொள்ளப்படும் நிலை வைப்பு நிதிகளுக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் உயா்த்தியுள்ளது.

DIN

தங்களிடம் மேற்கொள்ளப்படும் நிலை வைப்பு நிதிகளுக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் உயா்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம், இந்த நிதியாண்டில் ஐந்தாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, மூத்த குடிமக்களின் 2 ஆண்டு கால நிலை வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் உயா்த்தப்பட்டு 8.00 சதவீதமாகிறது. அவா்களின் 1 மற்றும் 3 ஆண்டுகளுக்கான நிலை வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் முறையே 7.70 சதவீதம் மற்றும் 8 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

அறக்கட்டளைகள் மேற்கொள்ளும் 1,2,3 ஆண்டுகளுக்கான நிலை வைப்பு நிதிகளுக்கு முறையே 7.20 சதவீதம், 7.50 சதவீதம், 8.00 சதவீதமாக வட்டி விகிதம் உயா்த்தப்படுகிறது.

தனி நபா்களின் ஓராண்டு நிலை வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகவும், 2 மற்றும் 3 ஆண்டு கால நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதமாகவும் அதிகரிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த வட்டி உயா்வு அமலில் இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT