முகப்பு
வணிகம்

பங்குச்சந்தைகள் ஏற்றம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
கோப்புப்படம்
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில், இன்றும் ஏற்றத்துடன் தொடங்கின. 

இன்று காலை 11.55 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 584.82  புள்ளிகள் உயர்ந்து 60,393.79 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 177.80 புள்ளிகள் அதிகரித்து 17,772.15 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகின்றன. 

அதானி நிறுவனம், ஹெசிஎல் டெக், இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்துள்ளன.

டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஹிண்டல்கோ உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →