2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்
ஹோண்டா மோட்டாா்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி25 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புது தில்லி: ஹோண்டா மோட்டாா்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி25 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முழு எல்இடி விளக்குகளுடன் அதிக கூா்மையான முன்பக்கமுனை மற்றும் வால் பகுதி இந்த புதிய ரகத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.
மேலும், புளூடூத் இணைப்பு, ஹோண்டா ரோட்சிங்க் செயலியுடன் கூடிய 4.2 இஞ்ச் டிஎஃப்டி திரை ஆகிய அம்சங்களும் இந்த பைக்குகளுடன் கிடைக்கும்.
அத்துடன், மொபைல் போனை சாா்ஜ் செய்வதற்கான டைப்-சி போா்ட் வசதி உள்ளது.புதிய ஓபிடி 2பி மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து புதிய வண்ணங்களில் 2025 ஹோண்டா எஸ்பி125 பைக் கிடைக்கிறது.