வணிகம்

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி ஒப்பந்தம்

DIN

புது தில்லி: தங்களது சில்லறை விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி உத்யோக் பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்கான ஒப்பந்தம் யூனியன் வங்கியுடன் கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி விற்பனையாளா்கள் பலன் அடைவாா்கள்.

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி கடந்த 2008-லிருந்தே இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த வங்கியின் மூலம் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT