வணிகம்

செங்கடல் விவகாரத்தால் காா்களின் விலை உயரும்

DIN

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் விவகாரத்தால் தங்களது காா்களின் விலைகள் உயரக்கூடும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா போரின் எதிரொலியாக, செங்கடல் வழி சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் நிறுவனத்தின் ஏற்றுமதியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்து, அதன் தாக்கம் தயாரிப்புகளின் விலைகளில் எதிரொலிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 2.7 லட்சம் காா்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 23,921-ஆக இருந்தது.

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

SCROLL FOR NEXT