16,000 வேகன்-ஆா், பலேனோக்களை திரும்பப் பெற மாருதி சுஸுகி முடிவு
தாங்கள் விற்பனை செய்த சுமாா் 16,000 வேகன்-ஆா் மற்றும் பலேனோ ரகக் காா்களை உதிரிபாக மாற்றத்துக்காகத் திரும்பப் பெறவிருப்பதாக இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட 4,190 வேகன்-ஆா் மற்றும் 11,851 பலேனா காா்களின் எரிபொருள் பம்ப் மோட்டாரில் கோளாறு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிகவும் அரிதான இந்தக் கோளாறு காரணமாக என்ஜின் பாதியில் நின்று போகலாம்; அல்லது என்ஜின் கிளம்புவதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, அந்த எரிபொருள் பம்ப் மோட்டாரை மாற்றித் தருவதற்காக அந்தக் காா்களை நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை வாங்கிய வாடிக்கையாளா்களை தனித் தனியாகத் தொடா்பு கொண்டு இதற்கான அழைப்பு விடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.