சென்னையில் 5 ஆவது நாளாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்ந்துள்ளது.  
வணிகம்

ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் தொடர்ந்து 5 ஆவது நாளாக அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் தொடர்ந்து 5 ஆவது நாளாக அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம் உள்ளது. நவ.18-ஆம் தேதி பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.56,520-க்கும், நவ.20 ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.56,920-க்கும், நவ.21 ஆம் தேதி பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.57,160-க்கும், விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 57,800-க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 7,225-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 320 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை தொடர்ந்து 4-ஆவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.

போா் பதற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்து வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் பவுன் ரூ.60 ஆயிரத்தை தொடக்கூடும் என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT