சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 58,400-க்கு விற்பனையான நிலையில், நேற்று விலையில் மாற்றமின்றி விற்பனை ஆனது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,340-க்கும், ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,795-க்கும், ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் உச்சம்
சென்னையில் கடந்த வாரம் ஒரு கிராம் வெள்ளி 107-க்கும் விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ரூ. 110-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 2 உயர்ந்து ரூ. 112-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.