முகப்பு
வணிகம்

நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 1 ஏப்ரல், 2025 at 5:19 AM
கோப்புப்படம்
பகிர்:

2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள வரி நாளை முதல் அமலுக்கு வருவதால் உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியவுடன் நிஃப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் வர்த்தகமானது.

காலை 10. 30 நிலவரப்படி நிஃப்டி 23,292.25 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,511.96 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றது.

காலை நிலவரப்படி, நிஃப்டியில் ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோ மற்றும் இண்டஸ்இண்ட் வங்கிகளின் பங்குகள் 4 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவையின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →