முகப்பு
வணிகம்

அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!

இந்திய பங்குச் சந்தைகள் நிலவரம் பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2025 at 10:51 AM
பகிர்:

அமெரிக்கா அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரிவிதிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை சரிவுடன் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்னதாக, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதன்கிழமை மாலை லாபத்தில் முடிவடைந்தன.

இன்று அதிகாலை வரிவிதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. தற்போது, நிஃப்டி 49.90 புள்ளிகள் சரிந்து 23,282.45 ஆகவும், சென்செக்ஸ் 193.68 புள்ளிகள் சரிந்து 76,423.76 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

Advertisement

நிப்ஃடி ஐடி பங்குகள் 2.5 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. இதனிடையே நிஃப்டி பார்மா குறியீடு 4 சதவிகிதம் அதிகரித்து விற்பனையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.