ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!
ஜிஎஸ்டி-யில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான திட்டங்களால், ஆம்பர் எண்டர்பிரைசஸ் இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் உயர்ந்தது.
புதுதில்லி: தீபாவளிக்குள் ஜிஎஸ்டி-யில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான திட்டங்களால், ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன. இதனை தொடர்ந்து நுகர்வோர் சாதனங்களின் பங்குகளும் உயர்ந்து முடிவடைந்தன.
ஆம்பர் எண்டர்பிரைசஸ் இந்தியாவின் பங்குகள் 7.93 சதவிகிதமும், ப்ளூ ஸ்டார் 7.35 சதவிகிதமும், வோல்டாஸ் 5.78 சதவிகிதமும், ஹேவல்ஸ் இந்தியாவின் பங்குகள் 5.12 சதவிகிதமும், வேர்ல்பூல் ஆஃப் இந்தியா 4.74 சதவிகிதம் மற்றும் சிம்பொனி 3.69 சதவிகிதம் வரை பிஎஸ்இ-யில் உயர்ந்தன.
பிஎஸ்இ நுகர்வோர் சாதனங்களின் குறியீடு 3.08 சதவிகிதம் உயர்ந்து 60,879.51 ஆக உள்ளது.
Advertisement
Advertisement
வரி குறைப்பானது நுகர்வை அதிகரிக்கவும், சாதனங்களுக்கான தேவையை மேலும் அதிகரிக்கவும் இது கணிசமாக உதவும் என்றது கோத்ரேஜ் அப்ளையன்ஸ் நிறுவனம்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.