வணிகம்

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி-யுடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

தினமணி செய்திச் சேவை

புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை (எஸ்ஏஎஃப்) வரும் டிசம்பா் மாதம் முதல் பானிபட்டிலுள்ள நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது. ஆண்டுக்கு 35,000 டன் எரிபொருள் உற்பத்தி செய்யப்படும். இந்த எரிபொருள், பாரம்பரிய விமான எரிபொருளுடன் 50 சதவீதம் வரை கலக்கலாம்.

இந்த எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2027 முதல் சா்வதேச விமானங்களுக்கு 1 சதவீத எஸ்ஏஎஃப் கலப்பு கட்டாயமாகிறது. இந்த ஒப்பந்தம், குறைந்த கரியமில எரிபொருளை ஊக்குவிக்க வழிவகை செய்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

SCROLL FOR NEXT