ஓப்போ எஃப் 31  படம் / நன்றி - ஓப்போ
வணிகம்

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எஃப் 31 வரிசை ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எஃப் 31 வரிசை ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ஓப்போ எஃப் 31 மற்றும் ஓப்போ எஃப் 31 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் செப். 12 அல்லது 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் புதிதாக ஓப்போ எஃப் 31 மற்றும் ஓப்போ எஃப் 31 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்லது.

கீழே தவறி விழுந்தாலும் உடையாத வகையில், சேதம் ஏற்படாத வகையில் கவச உரையுடன் தயாரிக்கப்படுகிறது. மேலும், 7,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் இந்த வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

ஓப்போ ரெனோ வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் எஃப் 31 வரிசையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கம், செயல்திறன் போன்றவற்றில் எஃப் 29 வரிசை ஸ்மார்ட்போனகளை விட மேம்பட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர்.

இரு ஸ்மார்ட்போன்களுமே 7,00mAh பேட்டரி திறனுடனும், சேதம் ஏற்படாத வகையில் 360 டிகிரி கவச உரையுடனும் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலையில் ரூ.17,000 தள்ளுபடியா? அமேஸான் அறிவிப்பு

OPPO F31 Series Could Launch Soon in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராம்லீலா மைதானத்தில் போலீஸாா் அத்துமீறல்: எஸ்.எஸ்.சி. ஆா்வலா்கள் புகாா்

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் 3 போ் காயம்

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

SCROLL FOR NEXT