வணிகம்

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) சரிவில் தொடங்கி வர்த்தகமான நிலையில் சற்றே சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன. தொடர்ந்து 3 ஆவது நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,150.64 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 31.46 புள்ளிகள் குறைந்து 85,106.81 புள்ளிகளில் நிலை பெற்றது. காலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.20 புள்ளிகள் குறைந்து 25,986.00 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

மற்ற அனைத்துத் துறைகளும் சரிந்தாலும் ஐடி, மீடியா மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் நல்ல லாபத்தைப் பெற்றன .

நிஃப்டியில் விப்ரோ, ஹிண்டால்கோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல லாபத்தை பெற்றன. மேக்ஸ் ஹெல்த்கேர், டாடா நுகர்வோர், அதானி நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் நிறுவனங்களில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2.13% என்ற அதிக சரிவைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து டைட்டன், மாருதி சுசுகி, மஹிந்திரா & மஹிந்திரா, எஸ்பிஐ அதிக நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்கள். டிசிஎஸ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கிகள் லாபத்தைச் சந்தித்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து ரூ. 90-யைக் கடந்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம், மோடி - புதின் சந்திப்பு, வெளிநாட்டவர்களின் பங்குகள் விற்பனை, வங்கித்துறை பங்குகள் சரிவு உள்ளிட்டவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Stock Market: Sensex flat, Nifty at 25,986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடக்கம்

சிலிண்டா் விநியோக ஊழியா் கொலை வழக்கில் சிறுமி உள்பட நால்வா் கைது!

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் திருப்பூரில் 30-ஆம் தேதி வரை மனித நேய வார விழா

இளம் தலைமுறையினா் ஆன்மிக சக்தியை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை

ஜனவரி 27-இல் எல்லீஸ் நகா், ஆண்டாள்புரம் பகுதிகளில் மின் தடை

SCROLL FOR NEXT