PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.90.33 ஆக நிறைவு!

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.90.33 என்ற புதிய வரலாற்று குறைந்தபட்ச நிலையை எட்டியது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மையின் மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.90.33 என்ற புதிய வரலாற்று குறைந்தபட்ச நிலையை எட்டியது.

இந்தியா - அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பாதிக்கும் என்பதால், ரூபாயின் மதிப்பு எதிர்மறையான போக்கில் வர்த்தகமாகுவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். சந்தையில் நிலவும் இடர் தவிர்ப்பு மனப்பான்மை மற்றும் தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி உள்ளிட்டவையால் இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் பாதித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் ரூ.89.95 என்ற அளவில் வர்த்தகமானது. பிறகு, அதன் மதிப்பு வெகுவாக சரிந்து, அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 54 காசுகள் சரிவுடன் ரூ.90.48 என்ற புதிய குறைந்தபட்ச நிலையை எட்டியது. வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவை விட 39 காசுகள் குறைந்து ரூ.90.33 ஆக முடிவடைந்தது.

நேற்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: 3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தை! ஆட்டோ, உலோகம் பங்குகள் ஏற்றம்!

The rupee plunged 39 paise to close at an all-time low of 90.33 against the US dollar on Thursday amid uncertainty over the India-US trade deal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதன்முறையாக மௌனம் கலைத்த தவெக!

இந்த வார ஓடிடி படங்கள்!

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் 2 ஆவது பாடல்!

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்! 34 பேர் பலி

SCROLL FOR NEXT