இந்திய ரூபாய் 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிறைவு!

பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.

இருப்பினும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய மூலதனம் வெளியேற்றம் உள்ளிட்டவையால், உள்நாட்டு ரூபாய் மதிப்பின் உயர்வை வெகுவாக தடுத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.67-ஆக தொடங்கி, ரூ.89.59 முதல் ரூ.89.85 வரையிலான வரம்பில் வர்த்தகமானது. பிறகு, முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.

நேற்று ( திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பானது, டாலருக்கு நிகராக 1 காசுகள் சரிந்து ரூ.89.68-ஆக நிலைபெற்றது.

The rupee rose 3 paise to settle at 89.65 against the US dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சட்டமன்றத்தில் உட்கார ஆசையில்லை! பாஜகவுக்காக உழைக்க மட்டுமே ஆசை” சரத்குமார் பேட்டி

இபிஎஸ் உடன் கூட்டணி இல்லை - பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம் : ஓபிஎஸ்

60 நாள்களில் படப்பிடிப்பை முடித்த கென் கருணாஸ்!

தில்லி காற்று மாசு : 11 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆம் ஆத்மியே காரணம்: பாஜக

கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமா? அமித் மிஸ்ரா பதில்!

SCROLL FOR NEXT