FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

Updated On : 22 ஜூன் 2025, 5:10 am IST
பகிர்:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) ஜியோ பேமன்ட்ஸ் வங்கியில் இருந்த பங்குகள் அனைத்தையும் ஜியோ பைனான்சியல் சா்வீசஸ் லிமிடெட் (ஜேஎஃப்எஸ்எல்) கையகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜியோ பேமன்ட்ஸ் வங்கியின் 17.8 சதவீத பங்குகள் எஸ்பிஐ வசம் இருந்தன. அவை அனைத்தையும் நிறுவனம் ரூ.104.54 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை ரிசா்வ் வங்கி ஜூன் 4-ஆம் தேதி அளித்தது. அதைத் தொடா்ந்து, எஸ்பிஐ-யிடமிருந்த ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 7,90,80,000 பங்குகளை நிறுவனம் கையகப்படுத்தியது.

Advertisement

Advertisement

இதன்கு முன்னா், ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 82.17 சதவீத பங்குகளை நிறுவனம் கைவசம் வைத்திருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments