வணிகம்

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்தது!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

DIN

நேற்று சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை இன்று(மே 23) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,897 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 717.21 புள்ளிகள் அதிகரித்து 81,669.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.70 புள்ளிகள் உயர்ந்து 24,834.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 1 சதவீதம் உயர்ந்துள்ளது. நிஃப்டி ஐடி, ரியால்டி முறையே 0.9 சதவீதம், 0.7 சதவீதம் உயர்ந்துள்ளன. நிஃப்டி மெட்டல், பிஎஸ்யு வங்கி தலா 0.5 சதவீதம் உயர்ந்தன. அதேநேரத்தில் நிஃப்டி பார்மா (0.9%), நிஃப்டி நுகர்வோர் துறை (0.1%) சரிந்தது.

எட்டர்னல், ஐடிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பவர் கிரிட், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வரும் நிலையில், சன் பார்மா, மாருதி சுசுகி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

பிரசித்திபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா: தேரை வடம்பிடித்து இழுத்த ஆளுநர், முதல்வர்

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

SCROLL FOR NEXT