இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு! பிகார் தேர்தல் காரணமா?
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388.17 புள்ளிகள் உயர்ந்து 84,950.95 என்ற நிலையில் நிறைவடைந்தது. அதேபோல நிஃப்டி 103.40 புள்ளிகள் உயர்ந்து 26,013.45 புள்ளிகளாக இன்று நிலைபெற்றது.
இன்றைய பங்குச்சந்தையின் ஏற்றத்துக்கு பிகார் தேர்தல்தான் காரணம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். பிகார் தேர்தலின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், அதன்பின்னர் இன்றுதான் பங்குச்சந்தை வர்த்தகமானது.
Advertisement
Advertisement
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், மத்திய அரசின் நிலைத்தன்மை அதிகரிக்கும் என்ற நிலையில் இன்றைய பங்குச்சந்தை நேர்மறையில் வர்த்தகமானது என்று கூறுகிறார்கள்.
இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு
Sensex jumps 388.17 and Nifty climbs 103.40 points today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.