கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டும் ஆக்சிஸ் வங்கி!
ஆக்சிஸ் வங்கி கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.
புது தில்லி: தனியார் துறை கடன் வழங்குநரான ஆக்சிஸ் வங்கியானது, தனது வணிக வளர்ச்சிக்கு நிதியளிக்கும் பொருட்டு மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.
அதே வேளையில், வங்கியின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு ரூ.35,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தின் இது ஒரு பகுதியாகும்.
நீண்ட கால மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் வங்கி நிதி திரட்ட முன்மொழிந்துள்ளதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: திறன் விரிவாக்கத்திற்காக ரூ.910 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ்!