வணிகம்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

இந்தியாவில் ஆண்களுக்கான அழகுசாதனப் பொருட்களும், அதே வேளயில் தாய் மற்றும் குழந்தையின் பராமரிப்பு மற்றும் தயாரிப்பு வரம்பை தொடர்ந்து வலுப்படுத்த உள்ளதாகவும் பிலிப்ஸ் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: உலகளாவிய சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், இந்தியாவில் ஆண்களுக்கான அழகுசாதனப் பொருட்களும், அதே வேளயில் தாய் மற்றும் குழந்தையின் பராமரிப்பு பொருட்களின் வரம்பை தொடர்ந்து வலுப்படுத்த உள்ளதாகவும், உள்ளூர் சந்தையில் உலகளாவிய பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தை வேகமாக வளர்ந்து வருவதாகவும், பிரீமியம் பிரிவில் நிறுவனம் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில், நுகர்வோரைக் கருத்தில் கொண்டு, ரீசார்ஜ் செய்யக்கூடிய சருமப் பாதுகாப்பு தயாரிப்பான ஒன்பிளேடை வெளியிட பிலிப்ஸ் இந்தியா முடிவு செய்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளுடன் ஆண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், அதே வேளையில் தாய் மற்றும் குழந்தையின் பராமரிப்பு பொருட்கள் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பிற சந்தைகளில் உள்ள எங்கள் உலகளாவிய பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவோம் என்றார் பிலிப்ஸ் பெர்சனல் ஹெல்த் இந்தியா துணைக் கண்டத்தின் தலைவரான ஸ்மித் சுக்லா.

வாய்வழி ஆரோக்கியத்தில் பிலிப்ஸ் மிகப்பெரிய உலகளாவிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது என்றும், தற்போது அதை இந்தியாவிற்குக் கொண்டுவருவது குறித்து யோசித்து வருவதாகவும், அழகுபடுத்தல் பிரிவில், பிலிப்ஸ் இந்தியா 50 முதல் 60 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது என்றார்.

இதையும் படிக்க: ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

Global health technology firm Philips has said it will continue strengthening its male grooming and mother and child care product range in India, besides introducing global categories into the domestic market.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT