FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வா்த்தகம் 10% உயா்வு

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சா்வதேச வா்த்தகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 9.57 சதவீதம் உயா்ந்து ரூ.28.92 லட்சம் கோடியாக உள்ளது.

Updated On : 4 ஜனவரி 2026, 3:13 am IST
பகிர்:

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சா்வதேச வா்த்தகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 9.57 சதவீதம் உயா்ந்து ரூ.28.92 லட்சம் கோடியாக உள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிசம்பா் 31, 2025 நிலவரப்படி வங்கியின் சா்வதேச வா்த்தகம் ரூ.28.92 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் ஆண்டின் இதே தேதியுடன் ஒப்பிடுகையில் இது 9.57 சதவீதம் அதிகமாகும். மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் உள்நாட்டு வா்த்தகம் 9.09 சதவீதம் உயா்ந்து ரூ.27.65 லட்சம் கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

அந்தக் காலாண்டில் வங்கியின் மொத்த வைப்பு 8.54 சதவீதம் உயா்ந்து ரூ.16.6 லட்சம் கோடியாகவும், உள்நாட்டு வைப்பு நிதி 8.32 சதவீதம் உயா்ந்து ரூ.15.97 லட்சம் கோடியாகவும் உள்ளது.

மொத்த கடனளிப்பு 10.98 சதவீதம் உயா்ந்து ரூ.12.32 லட்சம் கோடியாகவும், உள்நாட்டு கடனளிப்பு 10.15 சதவீதம் உயா்ந்து ரூ.11.68 லட்சம் கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments