3 நாள்கள் சரிவுக்குப் பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
வணிகம்3 நாள்கள் சரிவுக்குப் பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
3 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 5) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,530.48 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 357.18 புள்ளிகள் அதிகரித்து 79,473.37 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130.55 புள்ளிகள் உயர்ந்து 24,611.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.78 சதவீதம், 0.68 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.
துறை வாரியாக,நிஃப்டி எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிகள், ஐடி பங்குகள் சரிந்தன. தவிர மற்ற துறை குறியீடுகள் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி மெட்டல், எண்ணெய் & எரிவாயு ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
சென்செக்ஸ் கோல் இந்தியா 4% என்ற அதிக லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை 3 சதவீதம் வரை உயர்ந்தன. மறுபுறம், டாடா நுகர்வோர் தயாரிப்புகள், நெஸ்லே இந்தியா ஆகியவை 1 சதவீதம் வரை சரிந்தன.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
எண்ணெய் சந்தைகளை நிலைப்படுத்த அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை கொண்டு வரும் என்று டிரம்ப் கூறியது பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.