முகப்பு
வணிகம்

பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.4,600 கோடி சமூகக் கடன்: எஸ்பிஐ

பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.4,600 கோடி சமூகக் கடன்...

Updated On : 7 மார்ச், 2026 at 7:52 PM
பகிர்:

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக 50 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.4,597 கோடி) மதிப்பிலான கூட்டு சமூகக் கடன் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெண்களுக்கு அதிகாரமளிப்பதையும், சமுதாயத்தில் நிலவும் பாலின இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சமூகக் கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுயதொழில் ஆா்வத்தை ஆதரித்து, அவா்களின் வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்யவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக அறிவிக்கப்பட்ட 50 கோடி டாலா் இலக்கைத் தாண்டி, முதலீட்டாளா்களிடமிருந்து கூடுதல் நிதி கிடைத்தால், அதையும் ஏற்றுக்கொண்டு பெண்களின் நலனுக்காகப் பயன்படுத்த சட்டபூா்வ அனுமதி பெறப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ தலைவா் சி.எஸ்.ஷெட்டி மேலும் கூறுகையில், ‘மகளிா் தினத்தையொட்டி பெண்களின் முன்னேற்றத்தை எங்களின் வளா்ச்சிப் பாதையின் ஓா் அங்கமாக மாற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

பொருளாதார வளா்ச்சி என்பது வெறும் எண்களில் மட்டும் இல்லை; அது சமூகத்தில் நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. இந்தச் சமூகக் கடன் திட்டம் அதற்கு ஒரு சான்று’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →