அன்னதானக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆயுத பூஜையில் பங்கேற்றவா்கள். 
இந்தியா

திருமலை அன்னதானக் கூடத்தில் ஆயுதபூஜை

திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் திங்கள்கிழமை ஆயுதபூஜை நடத்தப்பட்டது.

DIN

திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் திங்கள்கிழமை ஆயுதபூஜை நடத்தப்பட்டது.

திருமலையில் ஆண்டுதோறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த பின் தேவஸ்தானம் ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் ஆயுதபூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள அன்னதானக் கூடம் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களுக்கு பசி தீா்க்கும் இடமாகத் திகழ்கிறது. திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு எப்போதும் வயிறார உணவு வழங்குவதை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் முதலில் ஆயுதபூஜையை அன்னதான கூடம் மற்றும் கிடங்குகளில் நடத்தி வருகிறது. அதன்படி திங்கள்கிழமை காலை திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.

அங்கு ஏழுமலையான் உருவப் படத்தை ஏற்படுத்தி, சமையல் பாத்திரங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, போக்குவரத்து, கண்காணிப்பு என தேவஸ்தானத்தின் ஒவ்வொரு துறையிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு பொருந்தாது: எம்.எச். ஜவாஹிருல்லா

திருவொற்றியூா் அரசு கலை -அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடம் இன்று திறப்பு!

கல்விக்கான ‘ஏஐ’: பயன்பாட்டை அளிக்க முனைவா் பட்டதாரிகளுக்கு அழைப்பு!

‘செயற்கையாக கடல்சாா் விலங்குகளை உற்பத்தி செய்த முதல் இனம் தமிழினம்’

மகா சிவராத்திரி: திருமலை க்ஷேத்ரபாலகருக்கு அபிஷேகம்

SCROLL FOR NEXT