தெலங்கானாவில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா: 6 பேர் பலி 
இந்தியா

தெலங்கானாவில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா: 6 பேர் பலி

தெலங்கானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

PTI

தெலங்கானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 1078 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3.10 லட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்று காரணமாக 6 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி 1,712 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 3,10,819 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 

நோய் பாதித்து தற்போது 6,900 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை மட்டும் 59,705 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் முதல் கட்டமாக 11,38,488 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1-ல் 2,45,936 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT