தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை (அ) பாசிப்பருப்பு - 500 கி
சர்க்கரை - 750 கி
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 50 கி
ஏலம் - தேவைக்கேற்ப
நெய் - 300 கி
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, பாசிப்பருப்பு அல்லது பொட்டுக்கடலையை பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதிலேயே ஏலக்காயையும் போட்டு வறுக்கவும்.
முந்திரியை 4-5 துண்டுகளாக நறுக்கி, அதனை கொஞ்சம் நெய் விட்டு வறுக்கவும். பாசிப்பருப்பை அரவை மில்லில் நைசாக அரைக்கவும். இல்லையெனில் பாசிப்பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து சலித்து எடுக்கவும். சர்க்கரையையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவு,சர்க்கரைத் தூள் மற்றும் முந்திரியை போட்டு நன்றாக கலக்கவும்.
அடுப்பில் நெய்யை காய வைத்து, கை பொறுக்கும் பதத்தில் இரண்டு கரண்டி நெய்யின மாவில் கொட்டி, அந்த இடத்தை மட்டும் கலக்கி, சூடு ஆறு முன்னே., அதனை உருண்டையாகப் பிடிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.