முடக்கத்தான் கீரை இட்லி
தேவையானவை
இட்லி அரிசி -3 கிண்ணம்
முழு உளுந்து - அரை கிண்ணம்
வெந்தயம் - ஒரு கைப்பிடி
முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கிண்ணம்
வாழை இலை - 1
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானவை
செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத்தட்டு (14 இட்லித் தட்டு) அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடினமனாக ஊற்றவும்.
இட்லித் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இடலை இட்லி தயார்.
எண்ணெய் அதிகம் சேர்க்காததால், குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடலாம். சத்தானது. வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுக்குக் குளிர்ச்சி. முடக்கத்தான் கீரை, மூட்டுவலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.