முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 211

சில நூல்களைக் கற்று, அவற்றைப் பொருளில்லாமல் ‘கலகல’ என்ற ஓசையோடு உளறுவது ஒழிக்க வேண்டிய ஒன்று....

Updated On : 15 ஏப்ரல், 2016 at 10:07 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:31 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கல கல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே

Advertisement

 

கலகலவென: பொருளில்லாமல்; கலைகள்: நூல்கள்; ஒழிவது: ஒழித்து, விட்டுவிட்டு;

கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கு இடை இடை வீழா

 

கருவழி தத்திய: பிறவியாகிய கருப்பாதையில் செலுத்தும்; மடு: பள்ளம்; நரகுக்கிடை: நரகத்தின் நடுவில்; இடைவீழா: விழுந்திடாமல்;

உலகு தனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன்

 

பிறவி தரித்து: பிறவியை எடுத்து; உழல்வது: துன்பப்பட்டு திரிவது;

உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே

 

அடிமைத் திரள்: அடியார் திருக்கூட்டம்; உபய: இரண்டு;

குலகிரி பொட்டு எழ அலைகடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா

 

குலகிரி: பெரியவையான ஏழு பர்வதங்கள்; பொட்டெழ: பொடிபட; நிசிசரன்: இரவில் உலவுபவன்—அரக்கன்;

குண தர வித்தக குமர புனத்திடை குற மகளை புணர் மணி மார்பா

 

குணதர: நற்குணத்தவனே; வித்தக: ஞான மூர்த்தியே; மணி: அழகு (பலபொருளில் ஒன்று);

அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே

 

வளை: சங்கு; நிலவைத் தரு: ஒளியை உமிழ்கின்ற;

அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே.

 

 

</p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/258587613&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>கலகலெனச்சில கலைகள்</strong> <strong>பிதற்றுவது ஒழிவ(து)</strong>... சில நூல்களைக் கற்று, அவற்றைப் பொருளில்லாமல் ‘கலகல’ என்ற ஓசையோடு உளறுவது ஒழிக்க வேண்டிய ஒன்று;</p><p align="justify"><strong>உனைச்சிறிதுரையாதே</strong> ...சற்றேனும் உன்னைத் துதிக்காமலும்;</p><p align="justify"><strong>கருவழி தத்திய மடுவதனிற் புகு</strong> ... பிறவியில் செலுத்துவதான கருக்குழிக்குள் வேகமாக வீழ்த்தும் பள்ளத்திலே புகுந்து,</p><p align="justify"><strong>கடுநரகுக்கிடை யிடைவீழா</strong> ... வெம்மையான நரகத்துக்கு நடுவிலே விழுந்துவிடாமல்,</p><p align="justify"><strong>உலகு தனிற்பல பிறவி தரித்து</strong> ... இந்த உலகத்திலே பலவிதமான பிறவிகளை எடுத்து,</p><p align="justify"><strong>அறவுழல்வது விட்டினி</strong> <strong>அடிநாயேன்</strong>... பெரிதும் துன்பத்தான் உழன்று திரிவதை விட்டு, கீழான நாய்போன்ற அடியேன்,</p><p align="justify"><strong>உனதடிமைத்திரள்</strong> <strong>அதனினும் உட்பட</strong> ... உன்னுடைய அடியார் திருக்கூட்டத்தின் உள்வட்டத்தில் ஒருவனாகும்படி,</p><p align="justify"><strong>உபய மலர்ப்பதமருள்வாயே</strong> ... உன்னுடைய இரண்டு மலர்ப்பாதங்களையும் தந்தருள வேண்டும்.</p><p align="justify"><strong>குலகிரி பொட்டெழ</strong> ... கிரெளஞ்சமலை உள்ளிட்ட குலபர்வதங்கள் தூளாகும்படியும்;</p><p align="justify"><strong>அலைகடல் வற்றிட</strong> ... அலைவீசுகின்ற கடல் முற்றிலும் வற்றிப் போகும்படியும்;</p><p align="justify"><strong>நிசிசரனைப்பொரும் அயில்வீரா</strong> ... (நிசி: இரவு, சரன்: திரிபவன் nocturnal) இரவில் திரியும் அசுரனான சூரபத்மனோடு போரிட்ட வேலை உடைய வீரனே!</p><p align="justify"><strong>குணதர வித்தக குமர</strong> ... நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே, குமரனே, <strong /></p><p align="justify"><strong>புனத்திடை குறமகளைப்புணர் மணிமார்பா</strong> ... தினைப்புனங்களுக்கு நடுவில் குறத்தியான வள்ளியை மணந்த அழகிய மார்பனே!</p><p align="justify"><strong>அலைபுனலிற்றவழ்</strong> ... அலை வீசும் நீரில் தவழ்வதான <em>(திருவக்கரைத் தலத்துக்கருகே சங்கரபரணி என்ற ஆறு ஓடுகிறது)</em></p><p align="justify"><strong>வளைநிலவைத்தரு</strong> ... சங்குகள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்</p><p align="justify"><strong>மணிதிருவக்கரை யுறைவோனே</strong> ... அழகிய திருவக்கரைத் தலத்தில் வீற்றிருப்பவனே, <strong /></p><p align="justify"><strong>அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவை</strong> ... அடியார் மனங்களில் எழும் விருப்பங்கள் எத்தனையோ, அத்தனையையும்,</p><p align="justify"><strong>தருவித்தருள் பெருமாளே.</strong> ... அவர்கள் அடையச் செய்து (விருப்பங்களை நிறைவேற்றி) அருளும் பெருமாளே!</p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>நற்குணத்தவனே!  ஞானமூர்த்தியே!  குமரனே!  தினைப்புனத்தினிடயே குறமகளான வள்ளியைத் தழுவிய அழகான மார்பனே!  அலைவீசும் நீரிலே தவழும் சங்குகள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் திருவக்கரைத் தலத்தில் வீற்றிருப்பவனே!  அடியார்களுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கருணாமூர்த்தியான பெருமாளே!</em></p><p align="justify"><em>ஒருசில நூல்களைப் படித்து, அவற்றை உணர்ந்தும் உணராமலும் பொருளற்ற முறையில் பிதற்றித் திரிவது ஒழியவேண்டும்; சிறிதேனும் உன்னைத் துதிக்காமல், கருப்பாதையில் விழுவதற்கான பள்ளத்தில் விழுந்தும், பற்பல பிறவிகளை எடுத்தும் துன்பத்தில் உழலும் நாயினும் கடையேனாகிய அடியேன், உனது அன்பர்கள் திருக்கூட்டத்தின் மையத்திலே விளங்கும்படியாக உன்னுடைய இரண்டு மலர்த்திருப் பாதங்களையும் தந்தருள வேண்டும்.</em><img src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.