பகுதி - 218
அருணகிரியார் முருகனை தரிசிதுப் பாடிய பற்பல தலங்களிலே ஒன்று ஊதி மலை. கோயமுத்தூரில் தாராபுரத்திலிருந்து
அருணகிரியார் முருகனை தரிசிதுப் பாடிய பற்பல தலங்களிலே ஒன்று ஊதி மலை. கோயமுத்தூரில் தாராபுரத்திலிருந்து காங்கேயத்துக்குப் போகும் வழியிலே உள்ளது. இங்கேதான் சிவபெருமானைக் கொங்கண சித்தர் கண்டு வணங்கினாராம். கொங்கண சித்தர் ‘ஊதி ஊதி’ ரசவாதத்தால் பொன்னைச் செய்ததால் இதன் பெயர் ஊதி மலையென்று இதற்குப் பெயர்க்காரணம் சொல்கிறார்கள். இருந்தாலும் இதன் பெயர்க் காரணம் இன்னதென்று நிச்சயமாகத் தெரியவில்லை. ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்றதைப் போல இந்தப் பாடல், முருகனை வணங்குவதற்கு இறைவன் திருவருளைக் கேட்கிறது.
அதுவும் ‘ஆதி அருணேசன் என்று ஆளும் உனையே வணங்க’ அருள் தா என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து, சிவனார் காதிலே செய்தருளி உபதேசத்தை அடியேனுக்கும் செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் வைக்கிறார். பாடலைப் பார்ப்போம்.
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த தனதான
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த குமரேசா
Advertisement
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகையே நினைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபுரிந்து
நீதிநெறி யேவி ளங்க வுபதேச
நேர்மைசிவ னார் திகழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர
ஊனுமுயி ராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259803893&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>