முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 323

நறுமணம் நிறைந்த சந்தனக் கலவைகளை (அணிந்ததனால் அவற்றின்) மணம் வீசுகின்ற அழகான தனங்களை உடைய பெண்களுடைய,

Updated On : 3 ஆகஸ்ட், 2016 at 6:04 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:36 PM

பதச் சேதம்

சொற் பொருள்

பரிமள களப சுகந்த சந்த தனம் மானார்

Advertisement

 

பரிமள: மணமுள்ள; களப(ம்): கலவை; சுகந்த: நறுமணம்; சந்த: அழகிய;

படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே

 

படை: ஆயுதம்; யமபடை: கொடிய ஆயுதம்; அந்திக்கும்: சந்திக்கின்ற; கட்கடை: கண் கடை, கடைக்கண்;

வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே

 

வரிஅளி: வரி வண்டு; நிரை: வரிசை; முரல்: ஒலிக்கும், ரீங்கரிக்கும்; கொங்கு: வாசனையுள்ள; கங்குல்: இருண்ட; குழல்: கூந்தல்;

மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே

 

மறுகுதல்: கவலை கொள்ளுதல்;

அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா

 

தொங்கல்: மாலை;

அலை குமு குமு என வெம்ப கண்டித்து எறி வேலா

 

வெம்ப: கொதிக்க; கண்டித்து: கோபித்து;

திரி புரம் தகனரும் வந்திக்கும் சற் குரு நாதா

 

திரிபுர தகனர்: சிவனாரும்; வந்திக்கும்வணங்கும்;

ஜெய ஜெய ஹர ஹர செந்தில் கந்த பெருமாளே.

 

 

</strong></p><p><strong><br /><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/276630185&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></strong></p><p><strong><br />பரிமள களப சுகந்த</strong> <strong>சந்தத் தனமானார்</strong>... நறுமணம் நிறைந்த சந்தனக் கலவைகளை (அணிந்ததனால் அவற்றின்) மணம் வீசுகின்ற அழகான தனங்களை உடைய பெண்களுடைய,</p><p><strong>படை யமபடையென</strong> <strong>அந்திக்கும் கண் கடையாலே</strong>... ஆயுதங்களிலேயே மிகக் கொடிய ஆயுதமான யமபடைக்கு ஒப்பான கடைக்கண் பார்வையாலும்;</p><p><strong>வரியளி நிரைமுரல்</strong> <strong>கொங்குக் கங்குற் குழலாலே</strong>... வரிவண்டுகள் கூட்டம் கூட்டமாகச் சூழ்ந்து ஒலிக்கின்ற மணம் நிறைந்ததும் இருண்டதுமான கூந்தலின் (வசீகரத்தாலும்);</p><p><strong>மறுகிடு மருளனை</strong> ... மயங்கி மனம் கவலையுற்றுத் திரிகின்றவனான அடியேனை,</p><p><strong>இன்புற்று அன்புற்று அருள்வாயே</strong> ... இனிதாகவும் அன்புடனும் ஆட்கொண்டு அருளவேண்டும்.</p><p><strong>அரி திரு மருக</strong> ... ஹரியாகிய திருமாலுக்கும் திருவாகிய இலக்குமிக்கும் மருமகனே!</p><p><strong>கடம்பத் தொங்கற் றிருமார்பா</strong> ...கடப்ப மாலையை அணிந்திருக்கும் திருமார்பை உடையவனே!</p><p><strong>அலைகுமு குமுவென வெம்ப</strong> <strong>கண்டித்து எறிவேலா</strong>... குமுகுமுவென்று அலைகள் கொதித்துப் (பொங்குமாறு) கடலைக் கோபித்து வேலை எறிந்தவனே!</p><p><strong>திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா</strong> ... திரிபுரங்களையும் சுட்டெரித்த பரமசிவனார் வணங்குகின்ற உத்தம குருநாதா!</p><p><strong>ஜெயஜெய ஹரஹர</strong> ... வெற்றி மிக்கவனே!  பாவத்தைப் போக்குபவனே!</p><p><strong>செந்திற் கந்தப் பெருமாளே.</strong> ... திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.</p><p> </p><p><em>சுருக்க உரை</em></p><p><em>திருமாலுக்கும் திருமகளுக்கும் மருமகனே!  கடப்ப மாலையை அணிந்த மார்பை உடையவனே!  அலைகள் குமுகுமுவென்று கொதித்துப் பொங்குமாறு கடலைக் கோபித்து வேலை வீசியவனே!  முப்புரம் எரிசெய்த பெருமானும் வணங்குகின்ற சற்குருநாதனே!  (ஜெயஜெய ஹரஹர=) வெற்றியை உடையவனே!  பாவங்களைப் போக்குபவனே!  திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே!</em></p><p><em>மணமுள்ள பலவிதமான கலவைகளைப் பூசியதால் வாசம் வீசும் மார்பகங்களை உடைய மாதர்களுடைய, மிகக்கொடிய யமபடை என்ற ஆயுதத்துக்குச் சமமான கடைக்கண் பார்வையாலும்; வரிவண்டுகள் ஒலிக்கின்ற மலர்களைச் சூடியதும், இருண்டதுமான கூந்தலின் செறிவாலும், மனம் கவன்று அறிவு மயங்குகின்ற அடியேனை இனியனாகவும் அன்பனாகவும் (இருந்து) ஆண்டுகொண்டருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.