பகுதி - 327
இமவான் மகளான உமையம்மையின் மார்பில் பெருகிய பாலைப் பருகிய மயில் வீரனே! பிறைநிலவும் பாம்பும் கங்கையும் நெருங்கிப் பொருந்தியுள்ள சடாமுடியையுடைய சிவனார் அருளியவனே! திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமானே!
பதச் சேதம் | சொற் பொருள் |
தந்த பசி தனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் Advertisement
| தந்த பசி: ஏற்பட்ட பசி; |
தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிர் எனவே சார்
|
|
மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா
| கடும்பு: சுற்றம்; கடனுதவும்: கடமைக்குரிய; பகர்: சொல்லிக் கொண்டு; கேடா: குறையுடன்; |
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி
| நவிர்: மயிர்; மகிடம்: எருமை; |
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ
| அந்தகன்: எமன்; அடர்ந்து: நெருங்கி; |
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே
| மறலி: எமன்; |
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா
| மலை மங்கை: உமையம்மை; பயம்: பால்; அயிலும்: பருகும்; |
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே.
| துன்று: நெருங்கிய; சடிலர்: சடாமுடியை உடையவர்; |
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/276941319&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /><br /> </p><p align="justify"><strong>தந்த பசிதனையறிந்து முலையமுது தந்து</strong> ... பசி உண்டானதை அறிந்து, முலைப்பால் கொடுத்து,</p><p align="justify"><strong>முதுகு தடவிய தாயார்</strong> ... முதுகிலே தடவிக்கொடுத்த தாயாரும்;</p><p align="justify"><strong>தம்பி பணிவிடைசெய் தொண்டர்</strong> ...தம்பியும்; பணிவிடைகளைச் செய்த வேலைக்காரர்களும்;</p><p align="justify"><strong>பிரியமுள தங்கை மருகர் உயிரெனவே சார்</strong> <strong>மைந்தர்</strong>... பிரியம் நிறைந்த தங்கையும்; மருமக்களும்; உயிரைப்போல் நேசித்த பிள்ளைகளும்;</p><p align="justify"><strong>மனைவியர்கடும்பு</strong>... மனைவியரும்; சுற்றத்தாரும் (அனைவரும்),</p><p align="justify"><strong>கடனுதவும்</strong> <strong>அந்த வரிசைமொழி பகர்கேடா வந்து</strong> ... தத்தம் கடமைக்குரிய அந்தந்த உறவுமுறைகளைச் சொன்னபடி, குறையோடு வந்து,</p><p align="justify"><strong>தலைநவிர் அவிழ்ந்து தரைபுக மயங்க</strong> ... தலைமயிர் அவிழ்ந்து தரையில் புரளும்படியாக விழுந்து மயங்கும்படியாக;</p><p align="justify"><strong>ஒருமகிட மிசையேறி</strong> ... ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி </p><p align="justify"><strong>அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில்</strong> ... யமன் என்னை நெருங்கி வருகையிலே,</p><p align="justify"><strong>அஞ்ச லெனவலிய மயில்மேல்நீ</strong> ... ‘பயப்படாதே’ என்று சொன்னபடி, வலியதான மயிலின்மீது ஏறிக்கொண்டு நீ,</p><p align="justify"><strong>அந்த மறலியொடு உகந்த மனிதன்</strong> ... அந்த யமனிடத்திலே ‘இவன் நமக்கு மிகவும் வேண்டியவன்;</p><p align="justify"><strong>நமதன்பன் எனமொழிய வருவாயே</strong> ... ‘நம்முடைய அன்பன்’ என்று சொல்வதற்காக வந்தருள வேண்டும்.</p><p align="justify"><strong>சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள்</strong> ... இமவான் மகளான உமையம்மையின் சிந்தை மகிழும்படியாக அவருடைய இரண்டு மார்புகளிலும்,</p><p align="justify"><strong>சிந்து பயமயிலும் மயில்வீரா</strong> ... பெருகிய பாலைப் பருகிய மயில் வீரா! (<em>அல்லது அயிலும் அயில் வீரா என்று பிரித்தால், பருகிய வேலாயுதனே!</em>)</p><p align="justify"><strong>திங்கள் அரவுநதி துன்று சடிலர் அருள்</strong> ... பிறைச் சந்திரனும்; பாம்பும்; கங்கையும் நெருங்கி நிறைந்துள்ள சடாமுடியை உடைய சிவபிரான் அருளியவனே!</p><p align="justify"><strong>செந்தி னகரிலுறை பெருமாளே.</strong> ... திருச்செந்தூர் நகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.</p><p align="justify"><em><br />சுருக்க உரை</em></p><p align="justify"><em>இமவான் மகளான உமையம்மையின் மார்பில் பெருகிய பாலைப் பருகிய மயில் வீரனே! பிறைநிலவும் பாம்பும் கங்கையும் நெருங்கிப் பொருந்தியுள்ள சடாமுடியையுடைய சிவனார் அருளியவனே! திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமானே!</em></p><p align="justify"><em>எனக்குப் பசியேற்பட்டபோது முலைப்பால் தந்து, முதுகைத் தடவிக்கொடுத்த தாயாரும்; தம்பியும்; பணிவிடைகள் செய்த ஏவலாட்களும்; மனைவியும், யாவரும் தத்தமக்குரிய உறவுமுறைகளைக் கூறிக்கொண்டு தலைமுடி அவிழ்ந்து தரையில் புரளும்படி வரிசையாக தத்தம் குறைகளைச் சொல்லிக்கொண்டு அழும்படியாக எருமையில் ஏறிய யமன் என்னை நெருங்கிவரும் போது அவனிடம், ‘இவன் நமக்கு வேண்டியவன்; நமது அன்பன்’ என்று சொல்வதற்காக உன்னுடைய வலிமையான மயில்மீது ஏறிக்கொண்டு வந்தருள வேண்டும்.</em></p>