முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 334

இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த திருப்புகழ்.  ‘சும்மா இரு சொல்லற’ என்ற வாக்கின்படி

Updated On : 16 ஆகஸ்ட், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த திருப்புகழ்.  ‘சும்மா இரு சொல்லற’ என்ற வாக்கின்படி ‘சும்மா இருக்கும் மௌன ஞான நிலையில் வாழும்படியான பாக்கிய வகையை உனது திருவடிகள் (எனக்கு) அருளாதோ’ என்று சிவயோகத்தைக் கூடும் பேற்றைக் கேட்கிறது. 

அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள்; ஒற்றொழித்து 1, 4//8. 11//15. 18 ஆகிய எழுத்துகள் நெடில்.  தொங்கல் சீரில் 24, 25 ஆகி இரண்டெழுத்துகளும் நெடிலாக இருக்கலாம் அல்லது 24ம் எழுத்து மட்டுமே நெடிலாக இருக்கலாம்.  ஒற்றையும் சேர்த்து 2, 9, 16 ஆகிய எழுத்துகள் மெல்லொற்று.  இந்தப் பாடலில் வல்லொற்று கிடையாது.

தாந்தன தானதன தாந்தன தானதன

Advertisement

      தாந்தன தானதன                   தனதான

சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக

         தாண்டவ மாடியவர்              வடிவான

      சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்

         தாங்களு ஞானமுற              வடியேனுந்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு

         தோன்றிய சோதியொடு          சிவயோகந்

      தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு

         சோம்பினில் வாழும்வகை        அருளாதோ

வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்

         வான்பொழில் சூழும்வய         லயலேறி

      மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்

         மாந்திய வாரணிய               மலைமீதிற்

பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி

         பூண்பன பாரியன                 தனபாரப்

      பூங்குற மாதினுட னாங்குற வாடியிருள்

         பூம்பொழில் மேவிவளர்          பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.