பகுதி - 338
என்மனம் என்னதான் கட்டறுந்து திரிந்தாலும், எப்படிப்பட்ட நிலையிலும் உன்னுடைய திருவடிகளை ஒருபோதும் மறவேன்
என்மனம் என்னதான் கட்டறுந்து திரிந்தாலும், எப்படிப்பட்ட நிலையிலும் உன்னுடைய திருவடிகளை ஒருபோதும் மறவேன் என்று பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழில் கூறுகிறார்.
விரைவான தாளகதியை உடைய இப்பாடல், தொங்கல் சீர் ஒன்றைத் தவிர்த்து மற்ற அனைத்துச் சீர்களிலும் முழுக்க முழுக்க குறிலெழுத்துகளாலேயே அமைந்துள்ளது. அடிக்கு 34 எழுத்துகள்; தொங்கல் சீரில் வரும் 33-34 ஆகிய எழுத்துகள் மட்டுமே நெடில்; மற்ற அனைத்தும் குறில். இதில் 34ம் எழுத்து மட்டும் குறிலாகவோ நெடிலாகவோ இருக்கலாம். ஈற்றுக் குறில் நீண்டு ஒலிக்கும் என்பதால் இந்த மாற்றம் ஓசைக்கு வெகுவாகப் பொருந்துகிறது.
தனனதன தனனதன தனனதன தனனதன
Advertisement
தனனதன தனனதன தனதான
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென அநுராகம்
விளையம்ருக மதமுகுள முலைபுளக மெழநுதலில்
வியர்வுவர அணிசிதற மதுமாலை
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
யிதழ்பருகி யுருகியரி வையரோடே
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
யவசமுறு கினுமடிகள் மறவேனே
உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
வுரகர்பில முடியவொரு பதமோடி
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
வுயரவகி லபுவனம திரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
கருதரிய விதமொடழ குடனாடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத பெருமாளே.