முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 340

யமன் வந்து முன்னே நிற்பதற்கு முன்னால் மனத்தில் பக்தி தோன்றவேண்டும் என்ற கோரிக்கையை, பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழ் முன்வைக்கிறது.

Updated On : 23 ஆகஸ்ட், 2016 at 12:41 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

யமன் வந்து முன்னே நிற்பதற்கு முன்னால் மனத்தில் பக்தி தோன்றவேண்டும் என்ற கோரிக்கையை, பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழ் முன்வைக்கிறது.

அடிக்கு 22 எழுத்துகள் கொண்ட இப்பாடலில் ஒவ்வொரு சீரிலும் முதலெழுத்து நெடில்; மூன்றாவது எழுத்து வல்லொற்று.  பாடலைப் பார்ப்போம்.

தானத்த தானத்த தானத்த தானத்த

Advertisement

      தானத்த தானத்த                  தனதான

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற

         தோளுக்கை காலுற்ற             குடிலூடே

      சோர்வுற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு

         வேதித்த சூலத்த                 னணுகாமுன்

கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ

         டேபட்டு வீழ்வித்த               கொலைவேலா

      கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி

         கூர்கைக்கு நீகொற்ற             அருள்தாராய்

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

         ராவிக்கள் மாள்வித்து            மடியாதே

      ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு

         மாம்வித்தை யாமத்தை          யருள்வோனே

சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட

         தோதக்கண் மானுக்கு            மணவாளா

      தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்

         சேவிக்க வாழ்வித்த              பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.