பகுதி - 340
யமன் வந்து முன்னே நிற்பதற்கு முன்னால் மனத்தில் பக்தி தோன்றவேண்டும் என்ற கோரிக்கையை, பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழ் முன்வைக்கிறது.
யமன் வந்து முன்னே நிற்பதற்கு முன்னால் மனத்தில் பக்தி தோன்றவேண்டும் என்ற கோரிக்கையை, பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழ் முன்வைக்கிறது.
அடிக்கு 22 எழுத்துகள் கொண்ட இப்பாடலில் ஒவ்வொரு சீரிலும் முதலெழுத்து நெடில்; மூன்றாவது எழுத்து வல்லொற்று. பாடலைப் பார்ப்போம்.
தானத்த தானத்த தானத்த தானத்த
Advertisement
தானத்த தானத்த தனதான
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்ற குடிலூடே
சோர்வுற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
டேபட்டு வீழ்வித்த கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
ராவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
மாம்வித்தை யாமத்தை யருள்வோனே
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு மணவாளா
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.