பகுதி - 348
இப்பாடல் காஞ்சீபுரம் தலத்துக்கானது.
“முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே” என்ற ஈற்றடியில் முடியும் 11 திருப்புகழ்ப் பாக்களில் ஒன்று இது. இப்பாடல் காஞ்சீபுரம் தலத்துக்கானது. இதற்கு முன்னால் இந்த வரிசையில் ‘உற்பாதப்பூ’ (19ம் தவணை), ‘எற்றா வற்றா’ (148ம் தவணை), ‘செட்டா கத்தே’ (256ம் தவணை) ஆகிய பாடல்களைப் பார்த்திருக்கிறோம். இந்த வரிசையில் இன்றைய பாடலை நான்காவதாகப் பார்க்கிறோம்.
அடிக்கு ஒற்றொழித்துப் பதினாறு எழுத்துகளும்; 2, 4, 6, 8, 10, 12 ஆகிய எழுத்துகள் நெடிலாகவும்; ஒற்று சேர்த்து 2, 5, 8, 11, 14, 17 ஆகிய எழுத்துகள் வல்லொற்றாகவும் அமைந்த பாடல்.
தத்தா தத்தா தத்தா தத்தா
Advertisement
தத்தா தத்தா தனதான
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக் குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.